ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » கண்டெடுக்கப்பட்ட செம்பு நாணயங்கள் கருவூலத்தில் ஒப்படைப்பு


திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட செம்பு நாணயங்கள்
அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருச்செந்தூர் அருகேகுடியிருப்பு
விளை கிராமத்தில் 387 கிராம் செம்பு நாணய புதையல் கிடைத்தது. இது தொடர்பாக
தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் கடந்த 8.6.2012 அன்று வெளியிடப்பட்ட
அறிக்கையில் இந்த புதைபொருட்களை உரிமை கோரும் எவரும் தக்க ஆதாரங்களுடன்
நேற்று முன்தினம் (15ம் தேதி) காலை திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகம்
முன்னிலையில் நேரிலோ அல்லது அதிகாரம் பெற்ற முகவர் மூலமாகவோ தக்க
ஆதாரங்களுடன் ஆஜராகி தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த செம்பு நாணயங்களுக்கு யாரும் உரிமை
கோரவில்லை.மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகம், நேற்று
இந்த செம்பு நாணயங்களை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.

0 comments

Leave a Reply