ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி சிவன் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு
பூஜை நடந்தது.ஆறுமுகநேரியில் திருவாடுதுறை ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட
சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் உள்ளது. இங்குசனி
பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜையை
ஐயப்பபட்டர் நடத்தினார். சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
0 comments