ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » மீனவ குப்பத்தை கண்டறிய அலைந்த இயக்குனர்

 மீனவர்கள் பற்றிய கதையை படமாக்க, அழகான மீனவ குப்பத்தை தேடி அலைந்தார் இயக்குனர். பாசில், சித்திக், வினயனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஐ.கணேஷ். ‘செம்பட்டை’ என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மீனவ குடும்பத்தில் பிறந்த அண்ணன், தம்பி பற்றிய உண்மை கதையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு மீனவ கிராமத்தில் கதையை படமாக்க விரும்பவில்லை. கதையுடன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக அழகான மீனவ கிராமங்களை தேடினேன். 

ராமேஸ்வரம், நாகப்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களை பார்த்தும் பிடிக்கவில்லை. இறுதியாக நாகர்கோவில் கடற்கரை கிராமத்தை தேர்வு செய்தேன். குளச்சல், குறும்பனை, தொண்டி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்தது. கூத்துப்பட்டறையில் பயின்ற எம்.பாலா ஹீரோ. கேரளாவை சேர்ந்த கவுரி நம்பியார் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர், மலையாள படங்களில்கூட நடித்ததில்லை. இவருடன் தனுஸ்ரீ என்ற மற்றொரு  ஹீரோயினும் நடிக்கிறார். ஒளிப்பதிவு சலீம். இசை ஸ்ரீராகவ்.

0 comments

Leave a Reply