ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» September , பழையகாயல் » விவசாயி கொலை முயர்சி: சுமை தூக்கும் தொழிலாழாளி கைது.


பழையகாயலில் விவசாயியை கொலை செய்ய முயன்ற சுமை தூக்கும் தொழிலாளியை ஆத்தூர் போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர்.
          பழையகாயல் அருகிலுள்ள கோவங்காடு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் வேலுமணி(32).விவசாயி.கோவங்காடு தெற்கு தெரு ராஜா மகன் முத்துகிருஷ்ணன் என்ற மாரிக்கண்ணு (29).இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளி.
இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.திங்கட்கிழமை இரவு பழையகாயல் பஜாரில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
            தகராறு முத்தி முத்துகிருஷ்ணன் வேலுமணியை தன்னிடம் இருந்த கத்தியால் குத்தி உள்ளார்.இதில் வேலுமணிக்கு இடது பக்க விலாவில் காயம் ஏற்பட்டுள்ளது.அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
         ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்து திருச்செந்தூர் குற்றவியல் மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 comments

Leave a Reply