திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா கடந்த 22–ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
10–ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அதிகாலை 5.55 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 4 ரத வீதிகளின் வழியாக அம்மன் தேர் சென்று, மீண்டும் கோவில் நிலையை சேர்ந்தது.
0 comments