ஏழடிப்பட்டம் பிராமிக் கல்வெட்டு
ஏழடிப்பட்டம் செல்லும் வழியில் குகை வாசலை ஒட்டியவாறு நீண்ட பாறை கிடந்த நிலையில் உள்ளது.சிதைந்த நிலையில் உள்ள கல்வெட்டில் பின்வரும் சொற்கள் காணப்படுகின்றன.
‘’எருக்காட்டூரு கட்டுளன்’’
நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம்-ஆவணம் இதழ்,6.
ஏழடிப்பட்டத்திலிருந்து கீழே இறங்கி வரும்போது வழியில் இரண்டு பாறை முகடுகள் நீண்ட இடைப்பட்ட பகுதி பள்ளத்தாக்கு போலக் காணப்படுகிறது.பாறைகள் விழுந்ததனால் சிதந்து போன இப்பகுதியில் பாறை முகடு ஒன்றில் ஆறு வரிகளில் எழுத்துக்கள் மெலிதாகக் கீறப்பட்டுள்ளன.
1. .ப்பொய்கை மற்றத....
2. மன் சேண்ணாடன்
3. சிற் செண்ணண் கணண்
4. கம்போகல் சாத்தன்
5. பெந்தோடன் பொஇய்கை நக்கன்[செ]
6. சேம்மு மடல்
சித்தன்னவாசல் கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.8 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து சமணர்களின்குகை இருப்பிடமாக இருந்துள்ளது என்பது இப்புதியக் கல்வெட்டுக்களின் மூலம் அறியலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம்-ஆவணம் இதழ்,6.
0 comments