மூலவர் | தேரடி மாடன் சுவாமி |
பரிவாரத்தெய்வங்கள் | நாராயணசாமி கழுகுமலை சன்னியாசி சாமி பேச்சியம்மன் இசக்கியம்மன் முருகன் |
நடைத்திறப்பு | செவ்வாய் வெள்ளி மாலை 6.00 மணி முதல் 7.00 வரை |
திருவிழாக்கள் | ஆடி மாதம் 3 நாட்கள் கொடை விழா நடைபெறும். மாசி மாதம் திருச்செந்தூர் கோயில் தேரோட்டத்திற்காக 10 நாட்கள் சிறப்பு வழிபாடு. சித்திரை மாதம் இலட்சுமி மாநகரம் மாரியம்மன் கோயில் கொடை விழா நாடகளில் சிறப்பு வழிபாடு. ஆனிமாதம் திருச்செந்தூர் கோயில் தேரோட்டத்திற்காக 10 நாட்கள் சிறப்பு வழிபாடு. கார்த்திகை மாதம் பால் பழம் மற்றும் பணியாரம் சுட்டு வைத்து சிறப்பு வழிபாடு. |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் சுடலை மாடன் கதையுடன் நிகழ்த்தப் பெறுகின்றன. உடுக்கடிப்பாடலும் நடைபெறுகின்றது. |
நேர்த்திக்கடன்கள் | சல்லடம் குல்லா கடையம் மணி மற்றும் கோயில் வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள். |
பிறசெய்திகள் | இலட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயிலை உருவாக்கியது தேரடி மாடசுவாமி எனவே மாரியம்மன் கொடை விழாவிற்கு முன்னதாக சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது. திருச்செந்தூர் கோயில் தேரோட்டத்திற்கு இச்சாமி சென்று ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இத் தேரடிசுவாமி தேரோட்டத்தில் பங்கேற்று முதல் மரியாதை பெற்றிட செப்புப்பட்டயம் இருந்ததாக முன்னோர் கூறுவர் என்று பா.இசக்கிமுத்து கூறுகிறார். |
You Are Here: Home» Hindu , Temples » தேரடிமாடன்சாமிகோயில்-இலட்சுமிமாநகரம்
0 comments