ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்
********************
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசைபாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாளிரு புயமும்
மூன்று கண்னும் மும் மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரன்டமுப்புரிநூல் திகழ் ஔிமார்பும்
சொற்பதம் கடந்து துரிய மெய்ஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே.
முப்பழம் நுகரும் மூஷிக வாகன.
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்தான் எழுத்தும் அருளி
மாயப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல்ஐந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து
குரு வடிவாகிக் குலம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அருவித்து
இருவினை தன்னை அறுத்து இருள்கடித்து
தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒருமூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுய் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
போறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் அழுமுனைக் கபாலமும் கட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய நூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசைபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சகரத்தின் ஈரென்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக நூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிடெபட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள்செய்
முன்னை வினையில் முதலைக் கரைத்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரன்டிற்க்கும் ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனத்தத்து அழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கட்டி
அணுவிற்கு அனுவாய் அப்பாலுக்கு அப்பாலய்க்
கனுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நின்றும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனைஆண்ட
வித்தக விநாயகவிரை கழல் சரணே,
________ஓளவையார் அருளிய. விநாயகர் அகவல்...........!!!

0 comments

Leave a Reply