ஆறுமுகநேரி மெயின் பஜாரில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்தார். இந்நிலையில் பிரசாரம் செய்ய அனுமதி பெறாததால் பறக்கும் படை அதிகாரி ஆழ்வார், ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காயல்பட்டிணம் வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீனை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அனுமதி பெறாததால் அக்கட்சியை சேர்ந்த வாவு நாசர், அபு சாலிக் மீது ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Courtesy : Maalaimalar.com
0 comments