வனத்திருப்பதி கோயிலில் மூன்றாவது ஆண்டு வருஷாபிஷேக விழா வரும்
6ம் தேதி நடக்கிறது.வனத்திருப்பதி புன்னை நகர் ஸ்ரீநிவாச பெருமாள்,
ஆதிநாராயணன்-சிவனணைந்த பெருமாள் கோயிலின் மூன்றாவது வருஷாபிஷேக விழா வரும்
6ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு
சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜையும், காலை 9 மணிக்கு மேல் 10.30
மணிக்குள் வருஷாபிஷேக விழாவும் ஜலச அபிஷேகமும் நடக்கிறது.
மாலை 4.30
மாலை 4.30
மணிக்குஊஞ்சல் சேவையும், மாலை 6 மணிக்கு புதிய படிச்சட்டத்தில் நவசக்தி
விநாயகரும், புதிய கருட வாகனத்தில் உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாளும், புதிய
அன்னபட்சி வாகனத்தில் புன்னை ராஜகோபால் சுவாமியும், புதிய யானை வாகனத்தில்
திருத்தணி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியும், மதியம்
படிச்சட்டத்தில் வடபழனி ஆண்டவர், வாரியார் சுவாமிகளுடன் நாக கன்னியம்மன்
வாகனங்களில் ஆறு உற்சவ மூர்த்திகள் மேள தாளத்துடன் திருவீதி உலாவும்,மாலை
7.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை சிறப்பு வாணவேடிக்கையும், இரவு 8.15
மணிக்கு லஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சியும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
ஓட்டல் சரவணபவன் இனிப்பு பிரசாதமும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து
இரவு 12 மணிக்கு திருச்செந்தூர், ஆறுமுகநேரி, பூச்சிக்காடு, குரும்பூர்,
ஆத்தூர், ஏரல், சிவத்தையாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஆகிய
ஊர்களுக்கு இலவச வேன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை
வனத்திருப்பதி நிறுவனர், நிர்வாக கைங்கர்யதாரர் ராஜகோபால் செய்து
வருகிறார்.
0 comments