ஆறுமுகநேரி இளம் முன்னோடிகள் சங்கத்தின் சார்பில் பிளஸ் 2 படித்துவரும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். ஆறுமுகநேரி கே.ஏ.மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடந்த முகாமிற்கு சென்னை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இளம் முன்னோடிகள் சங்க செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். ஆடிட்டர்கள் பொன்பாண்டி இன்பரசு, செல்வகணேஷ், டிஎம்பி பாங்க் துணை மேலாளர் முத்துவேல், திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலக அலுவலர் ரமேஷ்ராமலிங்கம், சென்னை ஐஐடி ராஜேஷ், சென்னை கார்போரேட் பாங்க் கார்த்திகா, பாவ10ர்சத்திரம் ஓவை மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் சிபிசக்ரவர்த்தி, விஏஓ ராஜன் ஆகியோர் வழிப்புண்வு பயிற்சி அளித்தனர்.
You Are Here: Home» August , Daily News , ஆறுமுகநேரி » ஆறுமுகநேரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

0 comments