கலைபண்பட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க வருகின்ற அக்டோபர் 2015 வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும் அரசு விடுதி வசதியும், வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கலை ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் அரசு அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, 2/3C, கணேஷ் நகர் மேற்கு, 4-வது தெரு தூத்துக்குடி-8 என்ற முகவரியிலும் தொலைபேசி எண் 0461-2300605, செல்: 9443810926 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
0 comments