ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » விசாகத் திருவிழா: இன்று ஆலோசனைக் கூட்டம்

வைகாசி விசாகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன்3) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 11 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

விழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடுகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்பதால் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினால் அது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source : Dinamani.com



Tags: Daily News

0 comments

Leave a Reply