திருச்செந்தூரில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு திருச்செந்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றியத்தலைவர் அ.கோவிந்தன் தலைமை வகித்தார். ஆவின் நிறுவன மேலாளர் தங்கையா முன்னிலை வகித்தார். மருத்துவக்குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், எஸ்.முத்துகிருஷ்ணன், சி.சேகர், டி.காசி, கோபால், பட்டாணி, எஸ்.சுப்பையா, குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பால்வளத்துறை மேலாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
Courtesy: Dinamani.com
0 comments