வணக்கம்
யான் ஆறுமுகநேரியான்
பேசுகிறேன்…
நான்
முப்பது சதுரகி.மீ
பரப்பளவு கொண்ட
வெறும் நிலப்பரப்பு
அல்ல …
ஆய்ந்து பார்த்தால்
ஐநூறுஆண்டுகால
அகழ்ந்து பார்த்தால்
ஐந்தாயிரம் ஆண்டுகால
தொன்மை சரித்திரமும்
எமக்கு உண்டு……
தன்னுயிரை
துச்சமெனக்கருதி
நாட்டுவிடுதலைக்காக
சமர்புரிந்த
மகத்தான மாவீரர்களில்
முப்பத்து மூன்று பேர்
பெருமைமிகு
எம்மக்கள்…
வந்தாரை வாழவைக்கும்
தமிழகம் என்றால்
வந்தாரை ஆளவைக்கும்
ஆறுமுகநேரி எனலாம்…
அந்த அளவுக்கு
இன்றைக்கு நான்
ரொம்ப நல்லவன்
அறிமுகம் போதும்
இனி அறிவீர்...
-
விசாகவேல் தினகரன் த
ஆறுமுகநேரியான்
0 comments