ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » காயல்பட்டினம் மகளிர் கல்லூரியில் ரமலான் நோன்பு சிறப்புக் கூட்டம்

காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் புனித ரமலான் நோன்பு குறித்து சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
 கணிப்பொறியியல் மூன்றாமாண்டு மாணவி எம்.ஆர். நபிஷத் தாஹிரா கிராஅத் ஒதி கூட்டத்தை தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பத் துறை மூன்றாமாண்டு மாணவி கே. ஆயிஷா சமீனா ரமழான்  கவிதை வாசித்தார்.  மகளிர் அரபுக் கல்லூரி பேராசிரியை எம்.ஐ.கதிஜத்துல் குப்ரா ஆலிமா மு அஸ்க்கரியா சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனத் தலைவர் வாவு எஸ். செய்யது அப்துர் ரஹ்மான், அவரது துணைவியார் ஞானி வஜீஹா பேகம், வாவு எஸ்.ஏ.ஆர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாக இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி, தமிழ்த் துறைத் தலைவி இரா. அருணா ஜோதி மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.
 ஏற்பாடுகளை அரபுத் துறைத் தலைவி பேராசிரியை  எஸ்.ஏ.கே.முத்து மொகுதூம் பாத்திமா செய்திருந்தார். கணிப்பொறியியல் மூன்றாமாண்டு மாணவி எஸ். ஹவ்வா நஜாஹா நவ்ஷீன் வரவேற்புரையாற்றினார் வணிகவியல் மூன்றாமாண்டு மாணவி என்.எஸ். செய்யது நபிஷா நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply