
வழிபடுவோர் | கலிங்கர் குடும்பத்தினர் |
மூலவர் | லெட்சுமி தேவி, பார்வதி தேவி |
பரிவாரத்தெய்வங்கள் | தூசிமாடசாமி, சரஸ்வதி அம்மன், நாகலிங்கம், இராமர் ஆஞ்சநேயர் நவக்கிரகங்கள் |
நடைத்திறப்பு | தினசரி மாலை 5.00 மணி முதல் 8.00 வரை |
திருவிழாக்கள் | ஆடி மாதம் கடைசியில் தொடங்கி ஆவணி மாதம் வரை ஐந்து நாட்கள் நடைபெறுவது கோயில் கொடை விழா. நான்கு நாள் வில்லுப்பாட்டும் இரண்டு வேளை பூசையும் நடைபெறும். ஐந்தாவது நாள் சுவாமி ஊர்வலம் யானை முன்னடக்க மேள தாளத்துடன நடைபெறுகின்றன. மாதம் தோறும் திருவிளக்குப் பூஜை வழிபாடு நடைபெறுகிறது. |
பிறசெய்திகள் | தூசி மாடசாமியின் வாள்வீசும் திறத்தைக் கண்ணுற்ற வீரபாண்டியக் கட்டபொம்மன் இக்கோயிலுக்கு அர்த்த மண்டபம் ஒன்றினைக் கட்டிக் கொடுத்துள்ளான். இராசக்கோபுரம் இக்கோயிலில் கட்டப்பெற்று 25.06.1986 இல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்திற்கு திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை முருக பக்தர்களுக்கு காப்பி நீர் மோர் பானங்கள் மிச்சர் காரச்சேவு வகைகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். |
0 comments