ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » முத்தாரம்மன்கோயில் (வடக்குசுப்பிரமணியபுரம்)


மூலவர்முத்தாரம்மன்
பரிவாரத்தெய்வங்கள்சந்தணமாரி அம்மன், பத்திரகாணி அம்மன், தேவகன்னி
  அம்மன், நாககன்னி அம்மன், பேச்சிஅம்மன்,
குழிக்கரைபேச்சிஅம்மன்இலங்கத்தம்மன்வீரபத்திரசாமி
பைரவர்சாமி, அகஸ்தியர்சாமி தவமுனி சாமி
  சுடலைமாடசாமி பட்டாணி சாமி.
நடைத்திறப்புமாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை மார்கழி மாதம் அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை
திருவிழாதைமாதம் பொங்கல் நாளன்று திருமால் வழிபாடு
சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு வழிபாடு ஆடி மாதம் வருடாபிஷேகம் ஆவணி மாதம் கொடைவிழா முதல் செவ்வாய் முதல் 6 நாட்கள் கொடைவிழா நடைபெறும். புரட்டாசி மாதம் தசரா விழாமார்கழி மாதம் அதிகாலை வழிபாடு மாதம் முழுவதும்
நிகழ்த்துக்கலைகள்வில்லுப்பாடல் நிகழ்த்தப்படுகிறது. பெண்கள் எட்டு நாள் விரதமிருந்து முளைப்பாரி எடுத்து கோயிலுக்குச் செல்லும் போது கும்மிப்பாடல் நிகழ்த்துவார்கள்.
நேர்த்திக்கடன்கள்ஆயிரங்கண்பானை மாவிளக்குப் பெட்டி முளைப்பாரி
குத்துவிளக்கு கடையம் சதங்கை மணி நகைகள்
பொட்டுத்தாலி மற்றும் சாமிக்குரிய உடுப்புகளை எடுதது
வைத்தல்.
பிறசெய்திகள்60 ஆண்டுகளுக்கு முன்பு வழிபாடு நடைபெறாமல் இருந்தது.அது கண்ட மக்கள் வழிபாட்டிற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். பூசாரி கோயிலுள் சுத்தம் செய்த போது அங்கு செப்புக்குடம் கவிழ்ந்து கிடந்தது. அதனை நிமிர்த்தி எடுக்க முயற்சி செய்தனர் முடியவில்லை அந்நேரம் அக்குடத்திலிருந்து நல்ல பாம்பொன்று வந்தது. அடுத்த விநாடியே அது அம்மனின் சிலைக்குப் பின்னால் சென்று மறைந்தது. கோயில் கருவறைக்குள் 7 கடந்தை வண்டுகள் 7 கூடுகள் கட்டியிருந்தன. பூசாரி அச்சமுற்று பூஜை செய்ய
மறுத்தார் அந்நேரம் அருள்வரப் பெற்ற சாமியாடி
”அச்சப்படாமல் பூசை வை கூடாக மறைந்து விடும்” என்று கூறினார். அன்னையின் அற்புதத்தால் 7 கூடுகளும்  ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையாக மறைந்தன.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply