ஆறுமுகனேரியில் மனைவி நல தினம் கொண்டாடப்பட்டது.
ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் அறிவுத் திருக்கோவிலில் உள்ளது. இங்குள்ள யோகா மையத்தில் மனைவி நல தினம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
உலக சமுதாய சேவா சங்க நிறுவனர் வேதாத்திரி மகரிஷியின் மனைவி அன்னை லோகாம்பாள் பிறந்த தினம் மன வளக்கலை அன்பர்களால் உலகம் முழுவதும் மனைவி நல நாளாக கொண்டாடப்படுகிறது.
அதனடிப்படையில் ஆறுமுகனேரி அறிவுத் திருக்கோவிலில் நடைபெற்ற மனைவி நல தினத்தை மனவளக்கலை மன்ற பேராசிரியர் சங்கரலிங்கம் நடத்தினார்.
அவரது உரையில் பெண்ணின் பெருமை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பதியர் ஒருவரை ஒருவர் வாழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.மனைவிக்கு கணவர் மலரும் கணவருக்கு மனைவி பழமும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனவளக்கலை அன்பர் கதிரேசன் செய்திருந்தார்.
0 comments