ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » சாகுபுரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


சாகுபுரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
        மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட மருத்துவ பணிகள் இயக்குனர் (காச நோய்) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் தென்திருப்பேரை காசநோய் கழகம் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன தொழிலாளர் கலையரங்கில் காச நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
         தூத்துக்குடி மாவட்ட காசநோய் மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் சுப்பையா தலைமை வகித்தார்.மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் சுந்தரலிங்கம் உரையாற்றுகையில் காசநோய் எவ்வாறு உருவாகிறது? எவ்வாறு பரவுகிறது?தடுப்பது மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விளக்கினார்.
       காசநோய் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.நிகழ்ச்சியில் காசநோய் திட்ட அலுவலர் குப்புசாமி, காசநோய் மேற்பார்வையாளர்கள் துளசிராமன், நாகூர் மீரான், சங்கர், மோகன், மாரிமுத்து மற்றும் நுட்பனர் தனலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
        முகாம் ஏற்பாடுகளை ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், டிசிடபிள்யூ மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராஜன் மற்றும் பினோ ஸ்டெபி ஆகியோர் செய்திருந்தனர்.
        முன்னதாக டிசிடபிள்யூ நிறுவன பாதுகாப்பு மேலாளர் ராஜேந்திரன் அனைவரை யும் வரவேற்றார்.இறுதியில் துளசிராமன் நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply