ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரியில் இந்து எழுச்சி திருவிழா துவக்கம்: 11 அடி வீர விநாயகர் பிரதிஷ்டை.


ஆறுமுகனேரியில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 11 அடி வீர விநாயகர் சிலை ஸ்ரீசோமநாத சுவாமி கோவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பஜாருக்கு ஊர்வலமாக புறப்பட்டுகிறது.


ஆறுமுகனேரியில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவினை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்து எழுச்சி திருவிழா ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
              7 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோவிலின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த 11 அடி வீர விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி ஊர்வலமாக பஜாருக்கு கொண்டு செல்லப்பட்டது.வழியில் ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
         பின்னர் பஜாரில் உள்ள ஸ்ரீசெந்தில் விநாயகர் ஆலயத்திற்கு முன் வீர விநாயகர் பக்தர்கள் வழிபாட்டிற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.நிகழ்ச்சியில் திரளான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.
        செப்டம்பர் 3ஆம் தேதி இவ் வீர விநாயகர் சிலை தலைமையில் ஆறுமுகனேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகளுடன் மாலையில் திருச்செந்தூருக்கு விஜசர்சனத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.ஊர்வலத்தை பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.
          திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

0 comments

Leave a Reply