தியாக பூமியின் சுதந்திரப்போராட்டத் தியாகிகள்
கே.டி.கோசல்ராம்த.பெ. தூசிமுத்து நாடார்
க.தூசிமுத்து நாடார் பூவம்மாள் தம்பதிகளுக்குத் தவப்புதல்வராக 22.12.1915 இல் கோசல்ராம் பிறந்தார்.ஆறுமுகநேரியில் 5 வது வகுப்பு வரையும் சென்னையில் 10 ஆம் வகுப்பு வரையும் கல்வி பயின்றார். அனுபவக்கல்வியால் ஆங்கிலத்தில் புலமை பெற்றார்.
1930 இல் தம்முடைய 15 ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதில் வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். இவருடைய சிறுவயதினை மனதில் கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவாரம் வரை சப்ஜெயிலில் வைத்து அடித்து விரட்டி விட்டனர்.
1942 போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உப்புச்சத்தியாகிரக வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். பின் குரும்பூர் சதிவழக்கில் 1வது எதிராளியாகச் சேர்க்கப்பட்டு 21 மாதங்கள் சப் ஜெயிலில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். சாக்குச் சட்டையை அணியச் செய்து இரவும் பகலும் கை விலக்கு மாட்டி தனி அறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்யப்பட்டு தஞ்சை வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். 1945 இல் விடுதலைப் பெற்றார்.
ஆலயப்பரவேசம் :தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேசச் சட்டம் வரும் முன்பாகத் திருச்செந்தூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார்.
அமைப்பாளர் : உப்புத் தொழிலாளர் சங்கம் நாசரேத்தில் கூட்டுறவு நூற்பு ஆலை சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டுமென 1966 டிசம்பர் மாதம் சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்து வெற்றி கண்டார்.
மணிமுத்தாறு அணை கட்டுவதங்கு நிதி இல்லை கே.டி.கே. வசூலித்து தந்தால் திட்டம் என்று கைவிரித்த மராமத்து இலாகா அமைச்சர் திரு.பக்தவச்சலம் கூற்றைச் சவாலாக ஏற்றுக் கொண்டு ஒரே வாரத்தில் ஒன்றேகால் கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்து சாதனை செய்தார்.
நான்குநேரி வட்டாரம் விஜயநாராயணத்தில் ராணுவ ஏவுகணைத் தளம். ராதாபுரம் வட்டாரம் பணகுடி - ராக்கெட் தளம்.
குமரி மாவட்டம் ”சின்ன முட்டம்” மீன் பிடிப்புத் துறைமுகத் திட்டம், அம்பை வட்டாரம் ”மணிமுத்தாறு நீர்த்தேக்கம்” ,பச்சையாறு அணைத் திட்டம், சிறு உப்புத் தொழிலாளர் சங்கம், இலங்கை அகதிகள் நல்வாழ்வுத் திட்டம், நாசரேத் நூற்பாலை, சேதுசமுத்திர திட்டம், தாரங்கதாரா இராசாயன தொழிற்சாலை, காயல்பட்டினம் கூட்டு குடிநீர் திட்டம் ,கடலில் கலக்கும் குடிநீரை திசை திருப்பும் திட்டம், மின்சார திட்டம்
கரூர் - திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டம்
சென்னை - கன்னியாகுமாி கடலோரப் பகுதி சாலைத்திட்டம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி சாத்தான்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருமுறை 1946-1952 1952-1957 மேலவை உறுப்பினராக 1957-1962 மதுரை-திருநெல்வேலி-ராமநாதபுரம்-கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக 1977 முதல் 6வது 7வது 8வது பாராளுமன்றத்தில் செயல்பட்டுள்ளார். 6வது நாடாளுமன்றக் கூட்டங்களில் 25.03.77 முதல் 20.08.79 வரை 9 கட்டக் கூட்டுத் தொடாில் 195 கேள்விகளை எழுப்பியுள்ளார் 67 முறை பேசியுள்ளார். அன்னை இந்திரா காந்தியால் “கோசல்ராம்ஜி“ என அன்புடன் அழைக்கப்பெற்றவர் “மணிமுத்தாறு தந்த மாவீரன் தென்னாட்டுச் சிங்கம்“ எனப் போற்றப்படுகிறார்.
1930 இல்
சிறு வயதில்
துண்டு பிரசுரங்களை
வெள்ளையருக்கு எதிராகக்
கொடுத்தார். பலமுறை
கள்ளுக்கடை மறியல்
இளவயது என்பதால்
காவல்துறையினர் அடிகொடுத்து
விட்டனர். 1942 போராட்டத்தின்
போது துப்பாக்கியால்
இவரைச் சுட்டு
பிடிப்பதற்கு உத்தரவிடப்பட்டது.
கலைக்டர் ஹெச்மாடியால்
கைது செய்யப்பட்டார்.
வெள்ளையருக்கு எதிராக
மரணப் படை
அமைத்தார். உப்புச்சத்தியாகிரக
வழக்கில் ஒன்றரை
வருடம் சிறைவாசம்
குரும்பூர் சதிவழக்கில்
21 மாதம் சிறைவாசம்.
சாக்குச்சட்டை அணியச்
செய்தனர். கைவிலக்கு
போட்டனர். பல
கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம்
தென்காசி கொக்கரக்குளம்
தஞ்சை வேலூர்
சிறைகளில் தண்டனை
பெற்றார். போராட்டங்களுக்குத்
தளபதியாகத் திகழ்ந்தார்.
சட்டமன்ற உறுப்பினராகவும்
பாராளுமன்ற உறுப்பினராகவுமிருந்து
சேவை செய்துள்ளார்.
மனைவி பெயர்
கோமதி. இவருக்கு
மூன்று ஆண்களும்
இரண்டு பெண்களும்
உள்ளனர்.
எம்.எஸ்.செல்வராஜன்த.பெ.
சண்முகசுந்தர நாடார்
சண்முக சுந்தரம் நாடார் அவர்களுடைய புதல்வராக தியாகி எம்.எஸ்.செல்வராஜன் 15.10.1922 இல் பிறந்தார். 1938 இல் திருச்செந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். ஆசிரியப் பயிற்சியினை தம்முடைய சுதந்திரப் போராட்ட சிறைவாசத்திற்கு பின்னர் (194-1946) நிறைவு செய்து காயல்பட்டினம் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1946-1949 வரை பணியாற்றினார்.
சுதந்திரப் போராட்டம் : 1942 செப்டம்பர்
கீரனூர் உப்புச்சத்தியாகிரகத்தில் ஈடுபட்டபோது இவருடைய வயது 20 ஆறுமுகநேரியில் முதன் முதலாக கைது செய்யப்பட்டபோது “வந்தேமாதரம்ஜெய்ஹிந்” என்ற சொற்களை மீண்டும் மீண்டும் கூறியதால் போலீசாரின் குண்டாந்தடி தாக்குதல் மற்றும் சிறையில் பல கொடுமைகளுக்கு உள்ளான இவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர். கூட்டுறவு மூலம் பல அரிய நலத்திட்டங்களைத் தென் பகுதிக்குக் கொண்டு வந்தவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து குடிநீர் சாலை கல்வி வசதிகளுக்காகப் பாடுபட்டார். ஆலயப் பிரவேசத்திற்காகப் பாடுபட்டார்.
தலைவர்
|
சுதந்திர போராட்டத் தியாகிகள் காங்கிரஸ்
|
தலைவர்
|
உப்புத் தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனைச் சங்கம் 1949-1989
|
ஸ்தாபகர்
|
திருச்செந்தூர் கூட்டுறவு மில் நாசரேத் (1960-67)
|
ஸ்தாபகர்
|
கூட்டுறவு விவசாய வங்கி
|
ஸ்தாபகர்
|
நூற்பாலை கூட்டுறவுச் சங்கம்
|
ஸ்தாபகர்
|
கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கம்
|
ஸ்தாபகர்
|
உப்புத் தொழிலாளர் சங்கம்
|
ஸ்தாபகர்
|
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
|
ஸ்தாபகர்
|
கா.ஆ.மேல்நிலைப்பள்ளி
|
உப்பு தொழிலாளர்களை கூட்டுறவு மூலம் பங்குதாரர் ஆக்கினார். ஜில்லா போர்டு உறுப்பினராக இருந்த போது பல தொடக்கப் பள்ளிகளை மாவட்ட மெங்கும் திறந்துள்ளார் இவர் வகித்தப்பதவிகள் எண்ணிலடங்காதவையாகும்.
ஆறுமுகநேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளின் துயர்துடைக்க சென்னை அன்னப்பழம் அம்மாள் அறக்கட்டளை மூலம் நல உதவித்திட்டங்களை ஏற்பாடு செய்தார்.
1942 ஆகஸ்டு இயக்கத்தில்
ஆறுமுகநேரி கீரனூர்
உப்புச் சத்தியாகிரகம்.
1942 செப்டம்பர் மாதத்தில்
ஆறுமுகநேரியில் முதன்
முதலாகக் கைது
செய்யப்பட்டு 15 பேருடன்
போலீஸ் வேனில்
ஏற்றிச் சென்ற
போது வந்தே
மாதரம் மகாத்மா
காந்திக்கு ஜே
என்று கொஷித்ததற்காக
வேனிலேயே போலீசாரின்
குண்டாந்தடி தாக்குதல்.
திருச்செந்தூர் சிறையில்
மூர்ச்சையாகும் வரை
விரல்கள் ஓடியும்படி
மடக்குதல் ரோமங்களை
பிடுங்கதுல் கைகளைப்
பின்புறமாக மடக்கி
முதுகில் செங்கல்லுடன்
சேர்த்துக்கட்டி செங்கல்லில்
தண்ணீர்விட்டு கட்டை
இறுக்கி சித்திரவதை
செய்தல். திருச்செந்தூர்
கொக்கிரகுளம் சப்ஜெயிலில்களில்
2 1/2 மாதம் அலிப்புரம்
சிறை 6 மாதம்
மனைவி பெயர்
லஷ்மிபாக்கியம். ஐந்து
பெண்களும் மூன்று
ஆண்களும் இருக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினராக மூன்று
முறை சேவை செய்துள்ளார்.
த.தங்கவேல் நாடார் த.பெ.
ரா.தவசிமுத்து
நாடார்
இரா.தவசிமுத்து நாடாரின் மகனான தியாகி த.தங்கவேல் நாடார் 1903 இல் பிறந்தார். இந்து நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்புவரை பயின்ற இவர் இளமையில் கொழும்பில் இருந்த போது தென்னற்தோட்டத்தில் பணிபுரிந்த “வாடி“ எனப்பட்ட தொழிலாளர்களுக்காகத் தொழிற்சங்கம் அமைத்து தலைவரானார். ஆந்திரா சென்னை போன்ற பெரு நகரங்களில் வணிகம் செய்தார். பின்பு பிறந்த ஊருக்குத் திரும்பி வந்து நகை செய்துவிற்கும் ”காசுக் கடை” நடத்தி வந்தார். அந்நேரம் 1941-42 நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கப்பட்டார்.
சுதந்திரப்போராட்டக் காலத்தில் மணம் ஆகி குழந்தைகளுடன் இருந்தவர். பிற போராட்ட வீரர்களனைவரும் இவரைவிட மிக வயது குறைந்தவர்களாக இருந்தனர். எனவே சுதந்திரப்போரட்டக் காலத்தில் வீரர்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும் பொருளுதவி செய்பவராகவும் இருந்தார். குலசை லோன் துரை தாக்குதலின் போது இராஜகோபாலன் வைத்திருந்த ரிவால்வர் இவர் வீட்டிலிருந்து பரிசோதித்து கொண்டு செல்லப்பட்டதாகும். ஆறுமுகநேரியின் வளர்ச்சிகாக அனைத்துப் பணிகளிலும் தலைவர்களோடு தலைவராக இருந்து செயல்பட்டார். சுதந்திர போராட்டத்தால் தன்னுடைய வசதியான தாலுகாவில் முதலாவதாக அனைத்து கிராமங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியை அமைத்து தொண்டாற்றியதால் ”தாலுகாவின் தந்தை” என்றும் சுரக்கமாக ”தானாத்தானா” என்றும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்ட்டார். ஆத்தூர் சோமநாதசுவாமி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டார். 17.10.1983 இல் காலமானார்
தலைவர்
|
கிராம காங்கிரஸ்
|
தலைவர்
|
தாலுகா காங்கிரஸ்
|
தலைவர்
|
தாலுகா விவசாயிகள் சங்கம்
|
தலைவர்
|
தாலுகா மகாந்மாநூற்பு யக்ங சங்கம்
|
தலைவர்
|
தாலுகா பூமிதான இயக்கம்
|
முதல் தலைவர்
|
காங்கிரஸ் தொழிற்சங்கம் டிசிடபுள்யூ
|
தலைவர்
|
தாலுகா சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம்
|
தலைவர்
|
தாலுகா அரிசன சேவாச் சங்கம்
|
செயலாளர்
|
கா.ஆ.மே.நி.பள்ளி
|
ஆறுமுகநேரி உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மருத்துவமனை கா.ஆ.மேல்நிலைப் பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் பல பொது நிறுவனங்கள் உருவாகப் பாடுபட்டார். தாலுகா முழுவதும் சென்று காங்கிரஸ் கட்சி அமைப்பை அமைத்தச் சிறப்பு இவருக்கு உண்டு.
1942 இல் உப்புச்
சத்தியாகிரகம் ஆறுமுகநேரி
நகர காங்கிரஸ்
கமிட்டி தலைவராக
இருந்து போராட்ட
வீரர்களுக்கு ஊக்கம்
கொடுத்து பொருளுதவி
செய்தார். உப்புச்
சத்தியாகிரகத்தில் 6 மாதத்
தண்டனை மெஞ்ஞானபுரம்
தபாலாபீசைக் கொளுத்திய
பொய் வழக்கு
விசாரணைக்காகத் திருச்செந்தூர்
ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி
கொக்கிரகுளம் கிளைச்
சிறையில் 20 மாதங்கள்
பொய்வழக்கு வாபஸ்
பெறப்பட்டு விடுதலை
ஆனவுடன் பாதுகாப்புச்
சட்டப்படி கைது
செய்யப்பட்டு தஞ்சாவூர்
கேம்ப் சிறையில்
வைக்கப்பட்டு சுதந்திரத்திற்குப்
பின் விடுதலை
அடைந்தார். முதல்
மனைவி பெயர்
வெள்ளையம்மாள் 2வது
மனைவி பெயர்
சண்முகக்கனி அம்மாள்
5 ஆண்களும் இரண்டு
பெண்களும் இருக்கிறார்கள்.20
வருடக் காலம்
தாலுகா காங்கிரஸ்
கமிட்டித் தலைவராக
இருந்திருக்கிறார். காங்கிரஸ்
கட்சி வேலையில்
ஈடுபட்ட இவர்
திருச்செந்தூர் தாலுகா
சுதந்திரப் போராட்ட
வீரர்கள் சங்கத்
தலைவராகவும் இருந்து
பணியாற்றியுள்ளார்.
வெ. காசிராஜன்த.பெ.
வெள்ளைய நாடார்
ஆறுமுகநேரி
உப்புச்சத்தியாகிரகம் குலசேகரப்பட்டினம்
லோன்துரை கொலைவழக்கு
குலசேகரப்பட்டினம் வழக்கில்
செக்ஷ்ன்கள் 148/7 அவசரச்சட்டம்
111/42 இன் கீழ்
3 ஆண்டு கடுங்காவல்
326/149 அவசரச்சட்டம் 4-இன்
கீழ் ஒரு
ஜென்மக் கடுங்காவல்
436/149 அவசரச்சட்டம் 4-ன்
கீழ் ஒரு
ஜென்மக் கடுங்காவல்
436/149, 395/6 அவசரச்சட்டம் 4-கீழ்
இன்னொரு ஜென்மக்
கடுங்காவல் அவசரச்சட்டம்
4-கீழ் மற்றுமொரு
ஜென்ம கடுங்காவல்
ஆகியவற்றை உள்ளடக்கிய
செக்ஷ்ன் 302/149 அவசரச்சட்டம்
4-ன் கீழ்
முடிவாக மரணதண்டனை
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
கிளைச் சிறையில்
கொக்கிரகுளத்தில் சாக்குச்சட்டை
நிலைவிளக்கு கசையடி
தண்டனை மதுரை
மத்தியச் சிறைத்
தூக்குத்தண்டனைக் கொட்டறையில்
2 ஆண்டு 7 மாதம்
பின்னர் திருச்சி
மத்தியச்சிறை அலிப்புரம்
சென்னை மத்தியச்
சிறை. ஜெனரல்
ஆஸ்பத்திரியில் சில
காலம் 1946 கடைசியில்
இறுதியாக விடுதலை
மனைவி பெயர்
இரத்தினவாதி மூன்று
பெண்களும் இரண்டு
ஆண்களும் இருக்கிறார்கள்.
பெ.ராஜகோபாலன்த.பெ.
பெரிய நாடார்
ஆறுமுகநேரி
உப்பளச்சட்ட உடைப்பு
வழக்கில் 18 மாதக்கடுங்காவல்
பின்னர் அது
6 மாதமாக குறைக்கப்பட்டது.
குலசேகரப்பட்டணம் வழக்கில்
செக்க்ஷன் 148/7 அவசரச்சட்டம்
111/42 ன் கீழ்
3 ஆண்டு கடுங்காவல்.
326/149 அவசரச்சட்டம் 4-ன்
கீழ் ஒரு
ஜென்ம கடுங்காவல்
436/149 அவசரச்சட்டம் 4-ன்
கீழ் ஒரு
ஜென்ம கடுங்காவல்
436/149, 395/6 அவசரச்சட்டம் 4-ன்
கீழ் இன்னொரு
ஜென்ம கடுங்காவல்
அவசரச்சட்டம் 4-ன்
கீழ் மற்றுமொரு
ஜென்ம கடுங்காவல்
ஆகியவற்றை உள்ளடக்கிய
செக்க்ஷன் 302/149 அவசரச்சட்டம்
4-இன் கீழ்
முடிவாக மரணத்தண்டனை
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
சப்ஜெயில்கள் கொக்கிரகுளத்தில்
சாக்கு சட்டை
நிலை விலங்கு
சகையடி தண்டனை
மதுரை மத்திய
சிறைத் தூக்குத்தண்டனை
கொட்டறையில் 2 ஆண்டு
7 மாதம் பின்னர்
திருச்சி சிறை
அலிப்புரம் சென்னை
மத்திய சிறை
ஜெனரல் ஆஸ்பத்திரியில்
சில காலம்
1946 கடைசியில்
இறுதியாக விடுதலை
மகைவி பெயர்
சித்திரவடிவம்மாள் இரு
பெண்களும் இரு
ஆண்களும் உள்ளனர்.
இவர் ஒரு
சிறந்த பத்திரிக்கையாளர்.
ச. அருணாசல
நாடார் த.பெ.
சண்முக நாடார்
1942 கீரனூர் உப்புச்சத்தியாகிரகம் 6 மாத தண்டனை. மாநில பென்ஷன் பெறுகிறார். மனைவி ஜெயலெட்சுமி 4 ஆண்களும் 3 பெண்களும் உள்ளனர். மாநில அரசு உதவித் தொகை வழங்குவதற்கான பரிந்துரைக் குழு உறுப்பினராக சேவை செய்துள்ளார்
த. ஆண்டியப்பன் த.பெ. தங்கையா நாடார்
பெரம்பூர்
சென்னை உப்புச்சத்தியாகிரகம்
அலிப்புரம் சிறையில்
6 மதம் தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர்
கிளை சிறையில்
9 மாதம் பென்ஷன்
பெறவில்லை. மனைவி
செவந்திகனி 3 பெண்களும்
5 ஆண்களும் உள்ளனர்.
1955 முதல் 68 வரை
சென்னை கார்ப்பரேஷன்
மெம்பராக பணியாற்றினார்
ச. திக்கிலான்குட்டி நாடார் த.பெ.
சண்முக நாடார்
சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரக்குளம்
அலிப்புரம் சிறையில்
6 மாதம் தண்டனை.
தூ.நடேச நாடார் த.பெ.தூசிமுத்து
நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
அலிப்புரம் சிறையில்
மொத்தம் 6 மாதம்
20 நாட்கள் மாநில
பென்ஷன் பெறுகிறார்.
மனைவி சொர்ணம்
அம்மாள் 4 ஆண்களும்
1 பெண்ணும் உள்ளனர்.
தூ.நடேச நாடார் த.பெ.தூசிமுத்து
நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
அலிப்புரம் சிறையில்
மொத்தம் 6 மாதம்
20 நாட்கள் மாநில
பென்ஷன் பெறுகிறார்.
மனைவி சொர்ணம்
அம்மாள் 4 ஆண்களும்
1 பெண்ணும் உள்ளனர்
ஆர்.எஸ். ராஜபாண்டியன் த.பெ.
சடையாண்டி நாடார்
ஆகஸ்டு
போராட்டம் உப்புச்சத்தியாகிரகம்
அலிப்புரம் கேம்ப்
சிறையில் 6 மாதம்.
மனைவி தனலெட்சுமி
3 ஆண்களும் 1 பெண்ணும்
இருக்கிறார்கள்.
எஸ்.வி. மகாலிங்கம் த.பெ.
வேலாயுத நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
6 மாதம் அலிப்புரம்
சிறையில் 2 மாதம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
கிளை சிறையில்
மனைவி சொர்ணம்மாள்
ஒரு ஆணும்
இரண்டு பெண்களும்
இருக்கிறார்கள்
எஸ்.ஏ. தாயம்மாள்
ஆறுமுகநேரி
1941 - இல் தனிப்பட்ட
சத்தியாகிரகத்தில் ஆழ்வார்திருநகாில்
போலீசாரால் கைது
செய்யப்பட்டு 1942-இல்
ஸ்ரீவைகுண்டம் கிளை
சிறையிலும் தூத்துக்குடி
கிளை சிறையிலும்
ரிமாண்டிலிருந்தார். அரசினர்
காதி இலாக்காவில்
பரப்பாடியில் வேலை
பார்த்தார்.
பி.தங்கராஜன் த.பெ.
பிரமத்து நாடார்
1942 உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
அலிப்புரம் கேம்ப்
சிறையில் 6 மாதம்.
மனைவி சண்முகசுந்தரி.
இ.பி. தங்கவேலன்
சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்டு
பல காலம்
தலைமறைவாக இருந்தவர்.
மனைவி தங்கம்மாள்
ல. மூக்க நாடார் த.பெ.
லட்சுமண நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
அலிப்புரம் சிறையில்
6 மாதம் மனைவி
காசித்தங்கம்மாள் 2 பெண்களும்
1 ஆணும் உள்ளனர்.
ஆ.சிவபெருமாள் த.பெ.
ஆதிநாராயண நாடார்
ஆறுமுகநேரி
கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம் அலிப்புரம் சிறையில்
6 மாதம் கலப்புத்
திருமணம் மனைவி
பாப்பம்மாள் ஏழு
குழந்தைகள்.
பொ. மாவுலி ராஜா த.பெ.
பொன்னையா நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
அலிப்புரம் சிறையில்
6 மாதம். மனைவி
அன்னப்பூர்ணம்மாள் 2 ஆண்களும்
2 பெண்களும் உள்ளனர்.
சோமசுந்தரம் பிள்ளை த.பெ.
சுப்பிரமணியம் பிள்ளை
ஆறுமுகநேரி
உப்புச்சத்தியாகிரகம் குரூம்பூர்
ரயில் நிலையம்
தீ விபத்து
அலிபுரத்தில் 6 மாதம்.
மனைவி சந்திரா
ஒரு பெண்
இருக்கிறார். பத்திரிக்கை
விற்பனையாளராக இருந்தார்.
ஆர்.எஸ். தங்கவேல் த.பெ.
சடையாண்டி நாடார்
1941 இல் தனி
நபர் சத்தியாகிரகத்தில்
சென்னை சிறையில்
3 மாதம். 1942இல்
எல்லா போராட்டங்களிலும்
பங்கெடுத்து ஒரு
வருடம் தலைமறைவாக
இருந்தார். ஆறுமுகநேரி
உப்புச்சத்தியாகிரகத்தில் கைதாகி
அலிப்புரம் சிறையில்
6 மாதத் தண்டனை.
மனைவி அழகுசுந்தரி
5 ஆண்களும் 3 பெண்களும்
உள்ளனர்.
சு.தங்க பெருமாள் த.பெ.
சுப்பையா நாடார்
ஆறுமுகநேரி
கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம்
அலிப்புரம் சிறையில்
6 மாதம். காலமான
முதல் மனைவிக்கு
3 ஆண்கள் இருக்கிறார்கள்.
2ஆம் மனைவி
ஞானரத்தினம்மாள்.
சு.பொ.காசிராஜன் த.பெ. பொன்னுசாமி நாடார்
ஆறுமுகநேரி
கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம்
செங்கற்பட்டு மைனர்
சிறையில் 2 வருடம்.
மனைவி பாலசுந்தரி
2 பெண்களும் 4 ஆண்களும்
உள்ளனர். போலீஸ்
கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தார்.
சு.நடராஜன் த.பெ.சுடலைமுத்து
நாடார்
கீழவீடு
உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர்
கொக்கிரகுளம் அலிப்புரம்
கேம்ப் சிறையில்
6 மாதத் தண்டனை.
மனைவி அருணாசலவடிவம்மாள்
2 பெண்களும் 2 ஆண்களும்
உள்ளனர்.
வே.த. சின்னத்துரை த.பெ.
தங்கையா நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
அலிப்புரம் கேம்ப்
சிறையில் 6 மாதத்
தண்டனை. மாநில
பென்ஷன் பெறுகிறார்.
மனைவி கனி
அம்மாள் 3 ஆண்களும்
ஒரு பெண்ணும்
உள்ளனர்.
அ.நயினார் த.பெ.அருணாச்சலம்
ஆசாரி
ஆறுமுகநேரி
கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
அலிப்புரம் சிறையில்
6 மாதத் தண்டனை.
மனைவி ஈஸ்வர
வடிவு 3 பெண்களும்
2 ஆணும் உள்ளனர்.
மா.அழகுவேல் நாடார் த.பெ.மாலவ
நாடார்
உப்புச்
சத்தியாகிரகம் ஆறுமாதம்
சிறைத்தண்டனை.
த.ராமநாடார் த.பெ.
தங்கவேல் நாடார்
ஆறுமுகநேரி.
கீரனூர்
உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர்
அலிப்புரம் சிறையில்
6 மாதம் தண்டனை.
மனைவி பாலகனி
அம்மாள் 2 ஆண்களும்
2 பெண்களும் இருக்கிறார்கள்.
த.லெக்ஷ்மண நாடார் த.பெ.
தங்கவேல் நாடார்
ஆறுமுகநேரி
கீரனூர் உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம்
கிளை சிறையில்
அலிப்புரம் சென்ட்ரல்
சிறையில் 6 மாதம்
தண்டனை. மனைவி
பகவதி. ஒரு
மகளும் உள்ளனர்.
ரா.நடராஜன் த.பெ.
ராமையா நாடார்
ஆறுமுகநேரி உப்புச்சத்தியாகிரகம்.
குரூம்பூர் ரயில்
நிலையம் தீவைப்பு
வழக்கு. திருச்செந்தூர்
கொக்கிரகுளம் தூத்துக்குடி
சப் சிறையில்
11/2 வருடம் ாிமாண்ட்.
பின்னர் பாதுகாப்புக்
கைதியாக தஞ்சாவூர்
விசேட சிறைச்சாலையில்
71/2 மாதம் வேலூர்
மத்திய சிறையில்
81/2 மாதம் 29.08.1945 இல்
விடுதலை. மனைவி
பாப்பாத்தி அம்மாள்
ஒரே மகள்
ராதா.
எஸ்.சுப்பையா நாடார்
|
கீரனூர் உப்புச் சத்தியாகிரகம் 6 மாதம் சிறை
|
து.சித்திரைவேல்
|
கீரனூர் உப்புச் சத்தியாகிரகம் 6 மாதம் சிறை
|
சி.பிட்சுமணி
|
கீரனூர் உப்புச் சத்தியாகிரகம் 6 மாதம் சிறை
|
இ.எஸ்.துரைராஜ்
|
கீரனூர் உப்புச் சத்தியாகிரகம் 6 மாதம் சிறை
|
சி.சண்முகம்பிள்ளை
|
கீரனூர் உப்புச் சத்தியாகிரகம் 6 மாதம் சிறை
|
very very useful information please add their pictures