ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகனேரியில் அனைத்துக் கோயில்களிலும் கார்த்திகைத் திருவிழா

    ஆறுமுகனேரியில் உள்ள அனைத்து கோயில்களிலும் கார்திகைத் திரு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.கோயில்களில் தீபங்களை ஏற்றி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
     கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு இன்று அனைத்து வீடுகளிலும் மஞ்சள் மற்றும் பச்சரிசி மாவினால் சேர்ந்த மஞ்சள் மாக்கோலத்தைப் போட்டனர். பனையோலையினைப் பயன் படுத்தி கொழுக்கட்டையைச் செய்து;புட்டு அவித்து தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கும் ;  தங்களுடைய முன்னோரை நினைத்தும் வைத்து வழிபட்டனர்.வீடெங்கும் தீபங்களை ஏற்றி மகிழ்ந்தனர்.குழந்தைகள் தெருக்களில் நெருப்புக்களை மூட்டிசொக்கப்பனை என்று கூறி விளையாடினர்.

0 comments

Leave a Reply