திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப் படுகிறது.பெண் குழந்தைகள் திருமணம் ஆகாத கன்னியர்,சுமங்கலியர் மாலைப் பொழுதில் திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளும் அங்கே குடி கொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர்.
வாழ்வில் தூய்மையும் ,தெய்வத்தன்மையும் பெருகும்.சஞ்சலமும் வறுமையும் நீங்கும் . சக்தியும் வளமையும் நிறையும்.' ஊர்கள் தோறும் கோயில்களில் திருவிள்க்கேற்றி வழிபாடு செய்தால், ஆன்மீக ஒருமைப்பாடும்,அன்புணர்வும் வளரும்.ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும் . தீயவை அனைத்தும் அகலும்.அன்பும்,அறனும்,அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நன்மைகளும்
பெறுவர்.
0 comments