ஆறுமுகனேரி மின்வாரிய அலுவலகத்தில் புதிய உதவி மின்பொறியாளர் திங்கட்கிழமை பதவியேற்றுள்ளார்.
ஆறுமுகனேரி மின்வாரிய அலுவலகத்தில் கடந்த மூன்று மாதங்களாக உதவி மின்பொறியாளர் பதவி காலியாக இருந்தது.உதவி மின் பொறியாளராக இருந்த அப்துல்லா முத்தையாபுரத்திற்கு மாற்றப்பட்ட பின் ஆறுமுகனேரிக்கு புதிய உதவி மின் பொறியாளர் நியமனம் செய்யப்படாததால் இப் பகுதி மக்கள் மிகவும் அவதியுற்று வந்தனர்.
இந்நிலையில் விருதுநகரில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த ஆனந்தராஜ் ஆறுமுகனேரிக்கு மாற்றலாகி திங்கட்கிழமை மாலை பதவியேற்றுள்ளார்.
0 comments