ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» September , ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் நேற்று விநாயகர் சதூர்த்தி விழா சிறப்பாக கொண்டாடினர்.


வுpநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஆறுமுகநேரி விநாயகர் கோயில் தெரு ஆறுமுக விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், கும்பபூஜை, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு ஆறுமுகவிநாயகர் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை சைவ வேளாளர் சங்க தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் முத்துராமன், பொருளாளர் கற்பகவிநாயகம், துணை தலைவர் மாணிக்கவாசகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விநாயகர் கோயில் தெரு செல்வ விநாயகர், அழகிய சுந்தர விநாயகர் கோயிலில் அதிகாலை சிறப்பு கணபதி ஹோமம், கும்பபூஜை, நடந்தது. இதனை ஐயப்பபட்டர் நடத்தினார். இதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜையை கோயில் அர்ச்சகர் நயினார் நடத்தினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
                ஆறுமுகநேரி தெப்பக்குளம் ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடந்தது. ஆறுமுகநேரி ஏஐடியூசி ஸ்ரீவெள்ளி விநாயகர் கோயிலில் அதிகாலை கணபதி ஹோமம், அதனைத் தொடர்ந்து ருத்ர சமக ஸீக்தாதி, மஹா அபிஷேகம், அலங்கார, சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. மாலையில் கணபதி ஷகஸ்ரநாம அர்ச்சனை, அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று ஜெயின்நகர் ஸ்ரீஜெய ஸித்தி விநாயகர், எஸ்.ஆர்.எஸ்.கார்டன் செல்வ விநாயகர், ரத்னா காலனி செல்வ ரத்ன விநாயகர், கமலா நேரு காலனி ஸ்ரீவலம்புரி விநாயகர். மெயின் பஜார் செந்தில் விநாயகர் கோயில் உட்பட நகரில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடந்தது

0 comments

Leave a Reply