ஆறுமுகனேரியில் பட்டப்பகலில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலி செயின் பறித்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வேல்குமார்.இவரது மனைவி சுமதி(38).இவர் கடந்த 28ஆம் தேதி பகலில் அருகிலுள்ள சீனந்தோப்பு கிராமத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தனது துணிமணிகளை துவைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது 25வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் சுமதியை கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தாலி செயினை பறித்துச் சென்று விட்டாராம்.கத்தியைக் காட்டியபோது சுமதி தடுத்ததினால் அவர் கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.தாலி செயின் மதிப்பு ரூபாய் 60ஆயிரம் ஆகும்.
ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் சுமதி புதந்கிழமை இரவு கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
ஆத்தூர் ஆய்வாளர் அமல்ராஜ் விசாரணை செய்து வருகிறார்.
0 comments