ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» September , ஆறுமுகநேரி » ஆறுமுகநேரியில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்தது.


கூட்டத்திற்கு திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன்; தலைமை வகித்தார். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விநாயகர் சிலைகள் எந்த இடத்தில் வைக்கப்பட்டாலும் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள அறிவுரைப்படி விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் ரசாயண கலவைகள் சேர்த்து தயார் செய்யக்கூடாது. இயற்கை களிமண், நீரில் கரையக் கூடிய வர்ணங்களை உபயோகிக்க வேண்டும்.
                வுpநாயகர் ஊர்வலம் காயல்பட்டணம் காந்தி வளைவை பிற்பகல் 4.30 மணிக்கு மேல் பிற்பகல் 6 மணிக்குள் கடந்து விட வேண்டும். பிற்பகல் 6 மணிக்குள் ஊர்வலததில் வரும் வாகனங்கள் அனைத்தும் காயல்பட்டணம் காந்தி வளைவை கடந்து விட வேண்டும். ஊர்வலம் வரும் நேரத்தில் காயல்பட்டணம் செய்ஹ{சைன் பள்ளி, ஐக்கிய விளையாட்டு சங்கம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரும் உள்ளேயோ அல்லது வெளியிலோ அனுமதிக்க கூடாது. ஊர்வலத்தில் மாற்று மதத்தையோ அல்லது மதத்தினரையோ கண்டித்து கோஷம் எழுப்பவோ சைகை காட்டவோ கூடாது.
                ஆறுமுகநோயில் இருந்து புறப்படும விநாயகர் ஊர்வலம் பேயன்விளை, ரத்னாபுரி, காயல்பட்டணம் புது பஸ் ஸ்டாண்ட், வண்ணார்குடித் தெரு, விசாலாட்சி அம்மன் கோயில் தெரு, மன்னர் ராஜா கோயில் தெரு, பூந்தோட்டம், தைக்காபுரம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் செல்ல வேண்டும். ஊர்வலத்தில் அச்சமூட்டும் வகையில் கம்புகள், கட்டைகள், ஆயுதங்கள் கொண்டு செல்லக் கூடாது. முன் அனுமதி பெறாத சிலைகள் ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது. என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்தில் ஆறுமுகநேரி, காயல்பட்டணம் பகுதியில் உள்ள  இந்துமுஸ்லிம் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

0 comments

Leave a Reply