காமராஜர் 109வது பிறந்த நாள் விழா, 64வது சுதந்திர தினவிழா, கே.டி.கோல்ராம் நினைவு சீருடை வழங்கும் விழா ஆகிய முன்பெரும் விழா நடந்தது, விழாவிற்கு திருச்செந்தூர் வட்டார காங்.தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். சிவகணேசன், லெட்சமண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகநேரி நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன், பாஜக முன்னாள் ஒன்றிய தலைவர் பற்குணபெருமாள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்க மாநில தலைவர் தவசிமுத்து, கண்ணாசில்க் சுதாகர், திருச்செந்தூர் பஞ்.யூனியன் துணைத் தலைவர் பேச்சியம்மாள், ஐஎன்டியூசி ராமச்சந்திரன், இளைஞர் காங். சுகந்தலை பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங் தலைவர் பெருமாள்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஏற்பாடுகளை கே.டி.கோசல்ராம் நற்பணி மன்ற செயலாளர் அருணாசலம் செய்திருந்தார்.
0 comments