சாகுபுரம் டி.சி.டபிள்யூ. கலையரங்கில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட மருத்துவ பணிகள் இயக்குநர் (காசநோய்) மற்றும் தென்திருப்பேரை காசநோய் கழகம் இணைந்து காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை இயக்குநர் (காசநோய்) டாக்டர் சுப்பையா தலைமை வகித்தார். டி.சி.டபிள்யூ. நிறுவன பாதுகாப்பு மேலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் சுந்தரலிங்கம், காசநோய் ஒருவருக்கு எப்படி வருகிறது, அது எவ்வாறு மற்றவருக்கு பரவுகிறது, அதற்குரிய சிகிச்சைகள் என்னää அது பரவுவதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து விளக்கினார்.
காசநோய் திட்ட அலுவலர் குப்புசாமி, காசநோய் மேற்பார்வையாளர்கள் துளசிராமன். நாகூர்மீரான், சங்கர், மோகன், மாரிமுத்து, தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். துளசிராமன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், மற்றும் டிசிடபிள்யூ. மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராஜ்ää ஃபினோ, ஆகியோர் செய்திருந்தனர்.
0 comments