ஆத்தூர் அருகில் தாமிரபரணி ஆற்று படுகையில் ஆண் பிணம் செவ்வாய் கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர் அருகில் முக்காணியில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஆறும் கடலும் சேருமிடத்தில் நீரில் மிதந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது.
முக்காணி கிராம நிர்வாக அலுவலர் திருமணி செல்வம் தகவலின் பேரில் ஆத்தூர் போலீஸார் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுமார் 50 வயதுள்ள அவர் போண்ட் மற்றும் சேர்ட் அணிந்துள்ளார்.அவர் யார் எவ்வாறு இறந்தார் என ஆத்தூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments