ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Christian , Temples » கிறிஸ்துவ சமயம்



கிறிஸ்துவ சமயம் 
9தென்தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளிலும் கொடும் வெப்பமிகுந்த தேரிப்பகுதிகளிலும் கிறிஸ்துவச் சமயத்தைப் பரவச் செய்திட பல சபைகளை உருவாக்கி சமயப்பணியுடன் கல்விப்பணியையும் ஆற்றியவர் அருள் திரு.ஜாண் தாமஸ் அவர்களாவார். ஆறுமுகநேரியில் கிறிஸ்துவச் சபையைத் தொடங்கி பெருமை பெற்றவர் இவரே.
             
இங்கிலாந்தில் வேல்ஸ் எனும் நாட்டில் மெம்ரோக் என்ற ஊரில் 10.11.1801 இல் பிறந்தார். இந்தியாவில் இயேசுவின் நற்செய்தியை வழங்கிட சுவிசேசகராய் வருகை தந்து கள்ளங்கபடமற்ற தென்னிந்திய மக்களுடைய அன்பில் கலந்து தொண்டாற்றினார். 26.03.1984 இல் மறைந்தார்.
  7
கி.பி.1838 இல் நான்கு குடும்கத்தினர் கிறிஸ்துவச்சமயத்திற்கு மாற்றினார். அதன்பின்பு படிப்படியாக ஆறுமுகநேரியில் வளர்ச்சிப் பெற்றது கிறிஸ்துவம்.
             
கி.பி.1841இல் ஆறுமுகநேரி சுப்பிரமணியபுரத்தில் திரு.ஜாண்தாமஸ் ஓர் ஓலைக் கூரை வேய்ந்த கோயிலைக் கட்டினார். ஓலைக் கூலையால் ஆன வீட்டில் தங்கினார். மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தார்.
             
அருள் திரு. வேதமுத்து ஆபிரகாம் அவர்களே முதல் குரு என்ற சிறப்பினைப் (1865-1876) பெறுகிறார். படிப்படியாக ஒவ்வொரு சபைகளும் தோன்றின.

  1. சுப்பிரமணியபுரம்                                                       
  2. இராஜமன்னியபுரம்
  3. பூவரசூர்                                                             
  4. மடத்துவிளை
  5. ஆறுமுகநேரி                                                  
  6. முத்துகிருஷ்ணாபுரம்
  7. காமராஜர்புரம்                                                 
  8. நத்தக்குளம்

ஆறுமுகநேரியில் மேற்கண்ட பகுதிகளில் தேவாலயங்கள் உள்ளன. தென்னிந்திய திருச்சபையில் நாசரேத் தூத்துக்குடி திருமண்டலத்தில் சிறப்போடு இயங்கி வருகின்றன. சபைகள் உருவான நாயில் மிகப்பெரிய அளவில் அசனப் பண்டிகைகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
             
கிறிஸ்துமஸ் நாளின் போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அலங்கார வாகனங்களில் வீதி வலம் வருவது சிறப்பாகும்.

8

புனித சவேரியார் ஆலயம் ஆறுமுகநேரி

புனித சவேரியார் ஆலயம் நூறாண்டுகளுக்கு முன்னர் நிறுவப் பெற்றதாகும் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளுடன் விளங்கி வருகிறது.

             
டிசம்பர் மாதம் 23 ஆம் புனித சவேரியாரின் அருட்பணியை நினைவு கூறும் விதத்தில் அவர் பணயம் செய்து வந்த ”திபுர்சியஸ்” பெயரிட்டக் கப்பலின் வடிவத்தைச் செய்து புனித சவேரியாரின் சிலையை அதில் வைத்து பற்கு மக்கள் ஆறுமுகநேரி வீதிகளில் இழுத்து வருவர். இரவில் மின் ஒளி அலங்காரம் கண்ணிற்கு அருமருந்தாகும். இத்தகைய ”திபுர்சியஸ்” வலம் வருதல் வேறெங்கும் காணயியலாத தனிச்சிறப்பாகும்.
             
ஆகஸ்டு மாத நிறைவில் புனித அன்னம்மாள் சப்பரம் வீதியில் எடுத்துவரப்படுகிறது.
             
காலையில் திருப்பலியும் மாலையில் வழிபாடும் நடைபெறுகிறது சந்தன சம நடுநிலைப் பள்ளி கல்விச் சேவையை செய்து வருகிறது.
             
ஆறுமுகநேரி பங்கிலிருந்து துணைப்பங்காக பின்வரும் பகுதிகளில் ஆலயங்கள் நடைபெற்று வருகின்றன.
1.         இராஜமன்னியபுரம் புனித அந்தோணியார் ஆலயம் 
2.         வடக்குத்தெரு புனித அன்னம்மாள் ஆலயம் 
3.         கானம் புனித அந்தோணியார் ஆலயம் 
4.         சாகுபுரம் புனித அந்தோணியார் ஆலயம் 
             

தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் - அடைக்கலாபுரம் 

அடைக்கலாபுரம் என்ற பெயரையும் அடைக்கலாபுரம் பங்கினையும் உருவாக்கித் தந்தது தூய வளன் அறநிலையம் ஆகும். தொடக்க காலத்தில் தூய வளன் அறநிலையம் 15.01.1854 இல் ஆலந்தலையில் ஓலைக் கூரையில் நிறுவப் பெற்றது. பிரான்சு நாட்டின் இயேசு சபை துறவியான அருட்திரு வொ்டியான் சே.ச. இதனை நிறுவினார். குழந்தைகள் காப்பக இல்லமாக நடத்துவதற்குக் கடற்கரைச் சார்ந்த வெப்பநிலை ஏற்றதாக இல்லாமலிருந்தது. எனவே 16.1.1857 இல் தற்போதுள்ள அடைக்கலாபுரம் பகுதிக்கு 64 அனாதைக் குழந்தைகளுடன் மாற்றம் செய்தனர். அண்டி வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ”அடைக்கலாபுரம்” என்று பெயரிட்டு அழைத்தனர். 1863 இல் அடைக்கலாபுரத்தில் வடக்கன் குளம் பொத்தகாலன்விளை காயாமொழி ஏரல் உடன்குடி வீரமாணிக்கம் சேதுக்குவாய்த்தான் ஆகிய ஊர்களில் பனைத்தொழில் வேளாண்மை செய்த மக்கள் குடியமர்த்தப்பட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களாயினர். அறநிலையம் வளர்ச்சிப் பெற்றது. மக்கள் தொகை பெருகியது. அறநிலையத்திற்கென இருந்த பெக்கட் தோமையார் ஆலயம் அறநிலைய மக்களுக்கும் ஊர்மக்களுக்கும்  போதுமானதாக இல்லை என அனைவரும் கருதினர். 19.04.1938 இல் அடைக்கலாபுரம் மக்களுக்கென தூய ஆரோக்கிய அன்னை ஆலய அடிக்கல்லை அறநிலைய அதிபர் அருட்திரு ஜோசப் ரோச் நாட்டினார். கோயில் சிறப்பாக அமைந்து ஜெபம் திருப்பலி திருநாளுடன் இன்றளவும் ஒளிர்கிறது. பங்கின் பாதுகாவலியான தூய ஆரோக்கிய அன்னையின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி நிறைவடையும் அடைக்கலாபுரம் பங்குத் தந்தையாக ஆர்.அமல்ராஜ் அடிகளார் உள்ளார்கள்.


ஆரோக்கிய அன்னை நடுநிலைப்பள்ளி 
அடைக்கலாபுரம் மக்கள் அடிப்படைக் கல்வியை பெற்று முன்னேற்றம் காண தொடக்கப் பள்ளியை 1965 இல் அந்தோணி சேவியர் அடிகளார் தொடக்கினார். 1984 இல் இப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக எம்.எஸ்.அந்தோணி அடிகளார் உயர்வடையச் செய்ததுடன் சமூகப்பாடம் கற்கும் சமுதாயக் கூடத்தையும் நிறுவினார்.


பிற சபைகள் 
தூய அன்னாள் சகோதரிகளின் ஆராக்கிய அன்னை கன்னியர் இல்லம். இவ் இல்லத்துடன் ஆரோக்கிய அன்னை மருந்தகம் இயங்குகிறது. 
பாலர் சபை         நற்கருணை வீரர் சபை     சிறுவழி இயக்கம்     கிறிஸ்து அரசர் சபை             
தொன் போஸ்கோ இளைஞர் இயக்கம்      திருகுடும்ப சபை   
புனித வின்செண்ட் தே பவுல் சபை 
      
தூய அன்னம்மாள் ஆலயம் நத்தக்குளம் அடைக்கலாபுரம் பங்குடன் இணைந்து இயங்குகிறது

Tags: Christian , Temples

0 comments

Leave a Reply