இசுலாம் சமயம்
இந்து சமயத்தினர் நிறைந்த ஆறுமுகநேரியில் மதநல்லிணக்கத்திற்குச் சான்றாக இரு வழிபாட்டு இடங்கள் உள்ளன.
பக்கீரப்பா பள்ளிவாசல்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள காயல்பட்டினம் அடைக்கலாபுரம் மூலக்கரை தூத்துக்குடி சாலைகள் இணையுமிடத்திற்கு வடகிழக்கே பக்கீர் முகம்மது என்ற பெரியவர் காலமானார். பொருளாதாரத்தில் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் உயர்ந்த அவருக்கு பள்ளிவாசல் ஒன்றினை எகிப்து கட்டட பாணியில் எழுப்பினர். இசுலாம் சமயத்தின் கலைச் சின்னமாக பொலிவு குன்றாமல் நிமிர்ந்து நிற்கிறது. மஹ்லறத்து காதிரியார் சபையினர் அதனைப் பராமரித்து வருகின்றனர்.
ஷாகுல் ஹமீதிய்யா மஜுத்
இம்மசூதி நாகூர் ஆண்டவாின் பெயரில் வழங்கப்படுகிறது. 125 ஆண்டுகளுக்கு முன்பு காயல்பட்டினத்திலிருந்து இரயில் பயணம் செய்வோர் இளைப்பாறிச் சென்றிட கட்டப் பெற்றதாகும்.
அப்பாப் பள்ளித் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் அரிய முயற்சியால் கட்டப்பெற்றது. ஐந்து வேளைத் தொழுகையுடன் வழிபாடு நடைபெற்று வருகிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகல இங்கு தண்ணீர் வீசி எறியப்படுகிறது
0 comments