ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » ஆத்தூர் வேத விருத்தி அறக்கட்டளை சார்பில் ரூபாய் 3.25லட்சம் கல்வி உதவித்தொகை.


ஆத்தூரில்  வேத விருத்தி அறக்கட்டளை சார்பில் ரூபாய் 3.25லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதுஆத்தூர் பி.எஸ்டபிள்யூ மற்றும் வேத விருத்தி அறக்கட்டளையின் 13வது ஆண்டு விழா நடைபெற்றது.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.கோவில்பட்டி வழக்கறிஞர் கே.சந்திரசேகர் முன்னிலை வகித்தார்அறக்கட்டளை உதவி தலைவர் வி.வி.ராஜாராமன் அனைவரையும் வரவேற்றனர்செயலாளர் வைக்கம் ஆர்.கணேஷ் ஆண்டறிக்கை வாசித்தளித்தார்.   விழாவில்  90 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 3.25 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் வேதபாடசாலையில் பசுமடம் கட்டுவதற்கு ரூபாய் 30ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது தூத்துக்குடி ஆடிட்டர் ஆர்.ரவி, சிட்டி யூனியன் வங்கி மேலாளர் ஸ்ரீராம், தோத்தாரி மற்றும் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை உள்ளிட்ட பகுதிகளிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
         அறக்கட்டளை தலைவர் ஆர்.கணேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியில் பொருளாளர் எஸ்.ஆர்.எஸ்.நாராயணன் நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply