ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து அன்னப்பழம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் ஆறுமுகநேரி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள 19 பள்ளிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை, நோட்டுகளும் 200 முதியோர்களுக்கு உதவித் தொகையும் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி கல்வி கமிட்டி செயலாளரும் நகர் நல மன்ற தலைவருமான சண்முக வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலாளர் பூபால்ராஜன், தேசிய நல்லாசிரியை விருது பெற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கட்டித்தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை பிரேமலதா அனிட்டா வரவேற்றார்.
வுpழாவில் அன்னப்பழம் அம்மாள் அறக்கட்டளை சேர்மன் சந்திரபாண்டியன், இயக்குநர் ஜெயசிங் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினர். விழாவில் தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் மயிலை பெரியசாமி, படத்தயாரிப்பாளர் ஆறுமுகநேரி முருகேசன் சுதந்திரம், காந்தி சேவா சங்கத்தைச் சார்ந்த குழந்தைவேல், ஆறுமுகநேரி லயன்ஸ் கிளப் செயலாளர் முருகேசன், ஜஸ்டின், கே.ஏ.மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் குரு கணேசன் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்;த்தீபன், வக்கீல் சந்திரசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். விவேகானந்தன் நிகழச்;சியை தொகுத்து வழங்கினார். நகர்நல மன்ற பொருளாளர் காந்தி நன்றி கூறினார்.
0 comments