ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரிக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த கோரிக்கை


ஆறுமுகநேரிக்கு தனி குடிநீர்த் திட்டம் செயல்படுத்த வேண்டும்
என தமிழக முதல்வருக்கு நகர அதிமுக.,அவைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகநேரி நகர அதிமுக.,அவைத் தலைவர் அமிர்தராஜ் தமிழக
முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது, ஆறுமுகநேரி டவுன்
பஞ்.,பகுதியில் 35 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.இங்கு 3 வருவாய்
கிராமங்களும், பல குக்கிராமங்களும் உள்ளது. இப்பகுதி மக்களுக்காக ஆத்தூரில்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் இருந்து
காயல்பட்டணம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிதண்ணீர் சப்ளை நடந்து
வருகிறது. குறைந்த அளவு, குறைவான நேரமே தண்ணீர் சப்ளை செய்யப்படுவதால்
இப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைப்பதில்லை.
இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு
வருகின்றனர். ஆறுமுகநேரி பகுதியில் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண
ஆறுமுகநேரிக்கு என தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் இவ்வாறு
மனுவில் தெரிவித்துள்ளார்.

பஞ்.,தலைவர்களுக்கும் பஞ்.,வளர்ச்சி திட்டநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் :கூட்டமைப்பில் தீர்மானம்
சாயர்புரம் :ஸ்ரீவைகுண்டம் யூனியன் பஞ்.,தலைவர்களின் கூட்டமைப்பு
கூட்டத்தில் எம்பி.,எம்எல்ஏ.,க்கள் போல பஞ்.,தலைவர்களுக்கும்,
பஞ்.,வளர்ச்சி திட்டநிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் யூனியன் பஞ்.,தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
சூளைவாய்க்காலில் நடந்தது. கூட்டத்திற்கு பஞ்.,தலைவர்கள் கூட்டமைப்பின்
தலைவரும், நட்டாத்தி பஞ்.,தலைவருமான பண்டாரம் தலைமை வகித்தார். கூட்டமைப்பு
பொரு ளாளர் மங்களகுறிச்சி சின்னத்துரை, துணை செயலாளர் உமரிக்காடு செல்வி
அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்பி.,எம்எல்ஏ.,க்களுக்கு
தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு இருப்பது போல பஞ்.,தலைவர்களுக்கும்,
பஞ்.,வளர்ச்சி திட்ட நிதியாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் நிதி
ஒதுக்கீடு செய்ய கேட்பது, தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு
திட்டத்தின் பணிகள் தரமாகவும், தொய்வின்றியும் நடக்க இத்திட்டத்தை
முழுமையாக பஞ்.,ம் ஒப்படைக்க வேண்டும் என கேட்பது, தமிழ்நாடு குடிநீர்
வாரியத்தால் வழங்கப்படும் குடிநீரை பஞ்.,வாரியாக அளவீடு செய்து குடிநீர்
கட்டணம் வசூலிக்கவும், தற்போது நிலுவையிலுள்ள குடிநீர் கட்டணத்தை தள்ளுபடி
செய்து வரும் காலங்களில் குடிநீர் கட்டணத்தை அரசே செலுத்த பரிசீலனை செய்ய
கேட்டும், தெரு விளக்கு பராமரிப்பு செய்ய ஒரு விளக்கிற்கு ரூ.20 என
இருப்பதை மாற்றி ரூ.30 என நிர்ணயம் செய்யவும், தெருவிளக்குகளை பராமரிக்க
பஞ்.,கென தனியாக மின்பணியாளர்களை நியமிக்க கேட்டும், பிறப்பு மற்றும்
இறப்பு சான்றிதழ்களை வழங்கும் அதிகாரத்தை பஞ்.,தலைவர்களுக்கு வழங்க
கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பஞ்.,தலைவர்கள்
திருப்பணிசெட்டிகுளம் சுயம்புலிங்கம், கொட்டாரகுறிச்சி ஜூலியட் அண்ணாமலை,
பழையகாயல் கலையரசி, ஆறுமுகமங்கலம் அரிராமன், மாரமங்கலம் பார்த்திபன்,
வாழவல்லான் ஜெயபிரகாஷ், சிவகளை கணபதிராஜ் மற்றும் பலர்

0 comments

Leave a Reply