தென்னக இரயிவேயின் அலட்சியப்போக்கு .வட்டார பயணிகள் சங்கம் மற்றும் காந்திஜி நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆறுமுகநேரி இரயில்வே ஸ்டேசன் பழமையான தொன்மச்சிறப்பு கொண்டது.தற்போது இங்கு இரயில் நிற்கின்ற போது ரிசர்வேசன் செய்யாத பெட்டி எஞ்சினுடன் கோர்த்துள்ளபடியால் ரிசர்வ் செய்யாத பயணிகள் நின்று ஏறுவதற்கான உயரமான பிளாட்பார வசதி இல்லை .ஆனால் பிளாட்பாரத்தை நீட்டி உயர்த்துவதற்கான காண்ட்ராக்ட் டெண்ட்டர் விடப்பட்டு,அவ்வேலையை முடிப்பதற்கான காலக்கெடுவும் முடிந்து விட்டதாக வட்டார பயணிகள் சங்கத்தலைவருக்கு தென்னக இரயிவேயிடமிருந்து தகவலறியும் சட்டப்படியான பதில் வந்துள்ளதாக வட்டாரத்தலைவர் இரா. தங்கமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து காந்திஜி நுகர்வோர் உரிமைகள் கழகத் தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து தெரிவித்துள்ளதாவது,ஆறுமுகநேரி இரயிவேஸ்டேசனை அதிகாரிகள் புறக்கணிக்கும் காரணத்தை அறிந்துகொண்டு உரிய சட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.ஆறுமுகநேரியில் பேருந்து நிறுத்தமில்லை என்று கூறி திருச்செந்தூருக்கும் காயல்பட்டிணத்திற்கும் டிக்கெட் போட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்த மதுரை மண்டல மேலாளர் மீது காந்திஜி நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கழகம், தூத்துக்குடி மாண்புமிகு நுகர்வோர் உரிமைகள் நீதின்றத்தில் வழக்குப் பதிவு செய்து வழக்கு நடைபெற்று வருகிறது.வழக்கு தொடுத்தபிறகுதான் ஆறுமுகநேரியின் மண்ணின் மகிமை புலப்படும்.இன்னும் சில மண்டலமேலாளர்களும்,ஓட்டுநர்களும்,நடத்துநர்களும் தலைக்கனம் பிடித்துக் கொண்டு ஆறுமுகநேரியில் நிறுத்தமில்லை என்று கூறுவதும் கவனத்திற்கு வந்துள்ளது.விரைவில் அவர்களும் நீதி தேவதையின் முன்பு வருவார்கள் .இரயில்வே போக்கும் கண்டிக்கத்தக்கது ஆகும்.பல்வேறு முறைகேடுகளுடன் சுகாதாரமின்றி செயல்படும் தென்னக இரயில்வேயும் விரைவில்;சட்டத்தின் முன் ஆறுமுகநேரி மக்களின் உரிமைகளுக்காக நிறுத்தப்படும்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகனேரி இரயிவே பிளாட்பாரத்தை விரிவுபடுத்தி செப்பனிடாத மர்மம் என்ன
0 comments