ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ரயில்வே புதிய தட்கல் முறை-ஆறுமுகநேரி பொதுமக்கள் மகிழ்ச்சி

   ரயில்வேயில் 2 நாட்களுக்கு முன்னதாக தட்கல் முறையில் முன்பதிவு செய்து அவசர பயணங்களை மேற்கொள்ளலாம் என்று இருந்தது.இதனை ஏஜண்டுகள் மற்றும் சிலர் முறைகேடாகப் பயன் படுத்தியதாக எழுந்த
புகாரை அடுத்து தெற்கு ரயில்வே.புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
                1 நாளைக்கு முன்பாக மட்டும் முன்பதிவு செய்ய முடியும்.ஒரு நபர் 4 நபர்களுக்கு மட்டுமே முன் பதிவு செய்ய முடியும்.  உரிய  அடையாள அட்டையுடன் மட்டும் பதிவு செய்யும் நபரே வர வேண்டும்.இது போன்ற சில கட்டுப்பாடுகளை தென்னக ரயில்வே விதித்துள்ளது.இதனை திருச்செந்தூர் ரயில் பயணிகள் சங்கத்தலைவர் இரா.தங்கமணி மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கத்தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து வரவேற்றுள்ளனர்.பொதுமக்களும் மகிழ்ச்சியைத்
தெரிவித்துள்ளனர்.

0 comments

Leave a Reply