ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மாவட்டத்தில் 210 குளங்கள் நிரம்பின

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் 210 குளங்கள் நிரம்பியுள்ளன.அரசு சார்ந்த அனைத்துத்துறை அதிகாரிகளும் இரவு பகலாக வெள்ளத்தால் மக்கள் பாதிகாத அளவில் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர் .ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் ஓடியது. தென்திருப்பேரை ப் பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது.இதே போலத்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். உப்பளங்களும் நீரில் மூழ்கியுள்ளதால் உப்பள விவசாயிகளும் மிகுந்த நஷ்டத்தில் உள்ளனர்.அரசு விவசாயக்கடன்களை ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.

0 comments

Leave a Reply