மூலவர் | குண்டக்கரை முத்து சாமி |
பரிவாரத்தெய்வங்கள் | பொன்மாடன்சாமி, சுடலை, பேச்சிஅம்மன் , சிவணைந்தபெருமாள்சாமி, மரியம்மை (கிறிஸ்துவர்) |
நடைத்திறப்பு | செவ்வாய் மற்றும் வெள்ளி மாலை 6 மணி |
திருவிழா | புரட்டாசி மாதம் மூன்று நாட்கள் கொடைவிழா நடைபெறுகிறது. கொடைவிழாவின் போது கிடா பலியிட்டு பொங்கலிட்டு படையலிடுகின்றனர் |
பிறசெய்திகள் | இக்கோயில் விளக்கு தண்ணீரில் எரியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த குண்டக்கரை சாமியின் சகோதரன் பேயன்விளையில் அமர்ந்து அருளாட்சி செய்து வரும் ஸ்ரீ பொன் மாடசாமி ஆவார். இக்கோயில் இருக்கும் சுற்றுப்புறப் பகுதியில் பழங்கால மக்கள் வசித்தற்கான ஆதாரங்கள் முதுமக்கள் தாழி கருப்பு சிகப்பு பானைகள் ஓடுகள் அறுத்த சங்குகள் கிணற்று உறைகள் (சுடுமண்ணால் ஆனது) கிடைக்கின்றன |
You Are Here: Home» Hindu , Temples » குண்டக்கரைசாமிகோயில் (அரசுமகளிர்மேல்நிலைப்பள்ளிப்பின்பக்கம்)
0 comments