மூலவர் | உதிரமாகாளி அம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | பொன் புகழ்பெருமாள்சாமி, தர்மகுட்டிசாஸ்தா வாலகுருசாமி, உதிரமாடன் சாமி, புலமாடன்சாமி, வனகாவலபெருமாள்சாமி, சின்னபிள்ளைஅம்மன், சோட்டையநாடார் சாமி, சிவணனைந்த பெருமாள் சாமி, சக்திஅம்மன், பேச்சியம்மன், வன்னியன், ரெட்டியன்சாமி, பைரவர், பொன்மாடசாமி, குத்துக்கல் பாண்டியர் சாமி, சப்பாணி மாடன் சாமி, பகடை சாமி, பப்பர புளிசாமி, ஆற்றுக்கசம்காத்த முனியசாமி, வன்னியர் சாமி, முண்டன் சாமி, சீவல்பேரிமாடன் சாமி |
நடைத்திறப்பு | செவ்வாய் மற்றும் வெள்ளி மாலை 6.30 மணி |
திருவழா | புரட்டாசி மாதம் கோயில் கொடை 7 நாட்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பால் பழ வழிபாடு நடத்தப்படுகிறது. திருவிளக்கு பூஜையும் நடத்தப்படுகிறது. |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் நடத்தப்படுகிறது. |
நேர்த்திக்கடன்கள் | கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல். சாமிக்கு உடுப்புகள் அணிகலன்கள் வழங்குதல். |
பிறசெய்திகள் | கொடைவிழாவின் போது 21 படி நெல்லை கைக்குத்தலில் குத்தி எடுத்து பெரியபானையில் பொங்கலிடுவர். பொங்கிவரும் வேளை தென்னம்பாளையை அதனுள் முக்கி எடுத்து மஞ்சள் பானை குளிப்பது போல குளிப்பர் உடல் முழுவதும் கொதிக்கும் கொதி நீரும் சோறும் வாரிஇறைக்கப்படுவது. “அன்னப்பால் குளித்தல்” என்று “அழைக்கப்படுகிறது. வேறெங்கும் காண இயலாத நிகழ்வாகும். 8 தலைமுறைகளுக்கு முன்பு இவ்வழிபாடு இங்கு தோன்றியது. கோயிலுக்கு இடதுபுறம் தீர்த்த கிணறு உள்ளது. |
You Are Here: Home» Hindu , Temples » உதிரமாகாளிஅம்மன்திருக்கோயில்- குத்துக்கல்சாமிகோயில்தெரு
0 comments