ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , காயல்பட்டினம் » காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை:திரளானோர் பங்கேற்பு.



காயல்பட்டினம் கடற்கறையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் செவ்வாய்கிழமை கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
            காயல்பட்டினம்  அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி சார்பில் செவ்வாய்கிழமை ரம்ஜான் பெருநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
            இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் செவ்வாய்கிழமை காலை காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் தொழுகையை அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி இமாம் நெய்னா முகம்மது நடத்தி வைத்தார்.
          பள்ளியின் கத்தீபு அப்துல் மஜீத் மஹ்ழரி குத்பா பேருரையை நிகழ்த்தினார்.
இச்சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் தலைவர் தஸ்தஹீர், செயலாளர் வழக்கறிஞர் மீரா சாகிப், பொருளாளர் மக்கி ஹாஜி, துணைத் தலைவர்கள் அபுல் ஹஸன் கலாமி, அபூபக்கர், இப்னு சவூது, துணைச் செயலாளர் நவாஸ்,  துணைப் பொருளாளர் கியாது சேட், அன்னை கதீஜா மதரஸா நிர்வாகி மாஷா அல்லா செய்யது முகம்மது, கரூர் அசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்துல் வாஹித், தேமுதிக அகமது உசேன், தமுமுக நகர தலைவர் ஜாஹிர் உசேன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
           தொழுகை முடிந்ததும் இஸ்லாமியர் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.

0 comments

Leave a Reply