ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடிக்கு நாளை வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் வருகை


தூத்துக்குடிக்கு நாளை வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன்
வருகிறார். துறை சம்பந்தமான நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில்
ஆலோசனை நடத்துகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்துறையின் கீழ் பல்வேறு பணிகள்,
நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய
வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாளை (11ம் தேதி) தூத்துக்குடி
வருகிறார்.
நாளை காலை விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வினை முடித்து கொண்டு அமைச்சர்
செங்கோட்டையன் தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து
தலைவரும், அதிமுக இளைஞரணி மாவட்ட செயலாளருமான சின்னத்துரை தம்பி திருமண
வரவேற்பு நிகழ்ச்சியில் அன்று அவசர பணி காரணமாக அமைச்சர் செங்கோட்டையன்
பங்கேற்கவில்லை.
இதனால் நாளை சின்னத்துரை வீட்டிற்கு அமைச்சர் செங்கோட்டையன் செல்கிறார்.
அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார். கலெ
க்டர் ஆஷீஷ்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு
தலைவர்கள் கலந்து கொள்ளும் வருவாய்துறை சம்பந்தமான ஆ லோசனை கூட்டத்தில்
கலந்து கொள்கிறார். அதன் பின்னர் திருச்செந்தூர் செல்லும் அமைச்சர் இரவு
அங்கு தங்குகிறார். காலையில் திருச்செந்தூரில் சாமிதரிசனம் செய்து விட்டு
கன்னியாகுமரி செல்கிறார். குமரி மாவட்ட வருவாய்துறை பணிகள் சம்பந்தமாக
கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். செங்கோட்டையன்
தூத்துக்குடி வருவதை ஒட்டி அவருக்கு வரவேற்பு அளிக்க மா வட்ட அதிமுக
சார்பில் ஏற்பா டு செய்யப்பட்டுள்ளது. மாவ ட்ட செயலாளரும், தொழிலாளர்
நலத்துறை அமைச்சருமான செல்லப்பாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள்
இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

0 comments

Leave a Reply