ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » தங்கத்தை கனவில்தான் இனி ஏழைகள் காண வேண்டிய நிலை

                 தங்கம் என்பது ஆண்டிகள் முத்ல் அரசர்கள் வரை விரும்புவதற்கு உரிய சிறப்பினைக் கொண்டுள்ளது.ஒரு மனிதனுடைய பொருளாதாரச் சிறப்பை அவர் வீட்டில் உள்ள பொன் நகைகளைக் கொண்டு எடை போடும் வழக்கம் நமது பகுதியில் இருந்தது தற்போதும் உள்ளது.தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அணியும் அணிகலன்களைப் பார்த்து வடநாடு ,வெளிநாடு பெண்களும் அத்தகைய பொன்நகைகள் மீது மோகம் கொண்டுள்ளபடியால் அணிகலன்கள் ; அதன் அடிப்படைப் பொருளான தங்கத்தின் தேவையும் அதனால் மதிப்பும் விலையும் ஏறிக்கொண்டுள்ளது.சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் கவனமும் தங்கத்தின் மீதும் சென்றது உலகளவிய தேவையை அதிகரித்தது.எது எப்படியோ போகட்டும் தமிழகத்தில் தற்போது தலைவிரித்தாடும் வரதட்சனைக் கொடுமையால் ;மணமகன் வீட்டார் கேட்கும் பொன் நகையால் ஏழை எளிய பெண்களின் திருமண வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது .நல்ல குடும்பம்;நல்ல குணம் என்பது மதிப்பிழந்து போயுள்ளது.வரதட்சணைக் கொடுமை ஒழிய வேண்டும்.பெண்களின் புன்னகை;குடும்பச் சிறப்பு மீண்டும் மலர வேண்டும்

0 comments

Leave a Reply