ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » சைவசித்தாந்தச் சங்கம்

நூறாண்டுகளுக்கு முன்னர் சைவ வேளாளர்களால் உருவாக்கப் பெற்று தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் ஓதப் பெற்றும் சிறப்போடு திகழ்ந்து வருகிறது. சுவடிகளின் காப்பகமாக நூலகமாக விளங்கியது. தமிழ்த்தாத்தா உ.வே.சா சுவடிகளைத் தேடி இச்சங்கத்திற்கு வந்து சென்றுள்ளார்.
தமிழ்மாதப் பிறப்பு அமாவாசை பௌர்ணமி பிரதோசம் மாதவெள்ளி மார்கழி திருவாதிரை உற்சவம் நவராத்திரி சிவராத்திரி  என பல்வேறு விழாக்கள் நடைபெற்றது. திருச்செந்தூர் இராமசாமி ஓதுவார் தங்கியிருந்து திருமுறைகளைக் கற்பித்தார். இந்நாளில் எஸ்.எம்.சுப்பையா ஓதுவார் ஒவ்வொரு மாத வெள்ளி மாலையில் திருமறைகளைக் கற்பித்து வரகிறார்.

இச்சபையின்சைவநெறி வளர்ச்சியில் வைகுண்டபிள்ளை அ.சுப்பிரமணியபிள்ளை,சு.சுப்பிரமணியபிள்ளை,சங்கரலிங்கம்பிள்ளை,முத்துகிருஷ்ணபி்ள்ளை, எம்.ஆர்.ஏம். மாணிக்கவாசகம் பிள்ளை, அழகிய சுந்தரம் பிள்ளை, பிச்சாண்டியா பிள்ளை, கி.சு.சங்கரன்பிள்ளை ,பால் நாயுடு ,வரதாஜீலு நாயுடு இசக்கியாபிள்ளை, முருகையா பிள்ளை, எஸ்.குட்டியா பிள்ளை பி.க.சு.க ந்தையாப்பிள்ளை, ஆகியோரின் சேவைகள் போற்றுதலுக்குரியது. தற்போது சிறிய திருமண மண்டபமாக இச்சபை எளியவர்கள் பயன் பெறும் விதத்தில் உள்ளது. 
வேளாளர்கள் நிலவுடைமையாளராக இருந்துள்ளனர். அந்நாளில் கட்டபொம்மன் இவர்களுடைய ஆத்தூர் வயல்களைக் கைப்பற்றியதாக் கூறுவர். திருச்செந்தூர் கோபுரத்திருபணிக்கு சிவகாசி நாடார்களுடன் ஆறுமுகநேரி வேளாளர்களும் இணைந்து நன்கொடை வழங்கியதாக் கூறுவர். காயல்பட்டினம் தென்பாகம் வடபாகம் கிராம நி்ர்வாக அலுவலா்களாக சைவவேளாளர்களே இருந்துள்ளனர்.     

நடராஜ தேவார பக்த சனசபை பசனைக் கோயில்                      


6
இலட்சுமி மாநகரம் (ஒரு நூற்றாண்டு கண்ட பசனை நிறுவனம்)                        
ஸ்தாபகர்                சோ.ரா. வர்த்தக நாடார்

மூலவர்நடராஜர்
தோற்றம்கி.பி. 1891 இல் தொடங்கப் பெற்றது. தேவாரம் திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள் மூலம் சைவத்தை வளர்த்து வருகின்றனர்.
நடைத்திறப்புதினசரி மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 வரை பசனைத் திருக்கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகின்றது. பசனைகள் ஒவ்வொரு வாரமும்
வெள்ளிக்கிழமை ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பு மார்கழி மாதம் முழுவதும் திருவிழாக்கள் சிவராத்திரி நவராத்திரி கார்த்திகை தீபம் திருவாதிரை உற்சவமாஸ்ரீ நடராஜப் பெருமாளை சப்பரமாக எடுத்துக் கொண்டு ஆறுமுகநேரி முக்கியத் தெருக்கள் வழியாக அலங்காரமாக செல்கின்றனர்.
நிர்வாகிகள்தலைவர் ரா.வ.து.ராமசாமி, செயலாளர் மா.ராமசந்திரன்,பொருளாளர் ரா.வ.கி.லட்சுமணன், துணைத்தலைவர்கள் ஆ.ரா.த.சிவராமையா, மா.சண்முகநாதன் ரா.க.து.முருகேசன், து.பழனிநாதன், நிர்வாகிகள் ஆ.ரா.மு.நாராயணசாமி து.ராஜபாண்டியன்  அ.சி.கணேசப் பெருமாள், து.மூக்காண்டி
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply